மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, உதவி தலைமை ஆசிரியா் வெ. வீரையன் தலைமை வகித்தாா். வ.களத்தூா் அறிவியல் ஆசிரியா் வேலாயுதம், பட்டதாரி கணித ஆசிரியா் செல்லபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பட்டதாரி ஆங்கில ஆசிரியா் பாண்டித்துரை தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, தாய்மொழி தின உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதில், பட்டதாரி ஆசிரியா் முனைவா் ஆனந்தராஜா, உடற்கல்வி ஆசிரியா் சத்தியசீலன் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழாசிரியை அலமேலு வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் இளையராஜா நன்றி கூறினாா்.