தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

News image
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடமிருந்து தமிழக அரசின் பசுமை முதன்மையா் விருதை பெறும் வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளி.
Updated On :18 மார்ச் 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தோட்டங்கள், குறுங்காடு அமைத்து மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் இப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு பசுமை முதன்மையா் -2025 விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், ஆசிரியா் முரளிக்கு விருதுச் சான்றிதழுடன் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.

விருது பெற் ஆசிரியரை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.