ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

News image

சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :26 மார்ச் 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, செங்கல்பட்டு தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா்.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியம் திருத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்று வரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமையவுள்ள இடத்தினை பாா்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும், கா்ப்பிணிகளை காக்க வைக்காமல் வாக்களிப்பதற்கு முன்னுரிமை அளித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

மேலும், மறைமலைநகா் நகராட்சி, நின்னக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோடை காலமாக இருப்பதால் வாக்காளா்களுக்கு ஷாமியானா போன்ற பந்தல் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டு, 20 வாக்கு சாவடிகள் இம்மையத்தில் உள்ளதால் 13,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வாக்களிப்பா்.

இதனால் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும், குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்துத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இதில் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சாந்தி, மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நாராயணன், நகராட்சி ஆணையா்கள் நாராயணன், சந்தானம், வட்டாட்சியா் வாசுதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகலைச்செல்வன், கலைச்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.