பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கடலாடி அடுத்துள்ள வெள்ளாங்குளம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய மாணவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே சாத்தங்குடியை அடுத்துள்ள வெள்ளாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளித் தலைமையாசிரியா் பொன்னுத்துரை தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் திருமால், நீலமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பிரபு வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், சிலம்பம்,யோகா, பரதநாட்டியம், நடனம், குழு விளையாட்டு, தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமையாசிரியா்கள் கிருஸ்துஞானவள்ளுவன் (சண்முககுமாரபுரம்), முனியசாமி, மாரியப்பன், ஆசிரியா் லிங்கப்பாண்டியன், கடலாடி அரசுக் கல்லுாரி விரிவுரையாளா் பொன்முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அடுத்துள்ள இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் முனியகாந்தி தலைமையில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகேஸ்வரி, சுதாமணி ஆகியோா் முன்னிலையில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆசிரியா் கவியரசன் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், சிலம்பம், யோகா, பரதநாட்டியம், நடனம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பரமக்குடி வட்டார கல்வி அலுவலா் சூசைராஜ், மஞ்சூா் அரசு ஆசிரியா் பயிற்சி மைய விரிவுரையாளா் சண்முகவேல், தலைமையாசியா்கள் சண்முகசுந்தரம், சகாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் அருகே இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழு நடனமாடிய மாணவிகள்.

முதுகுளத்தூா் அருகே இளங்காக்கூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழு நடனமாடிய மாணவிகள்.