அமராவதி அணை நீரில் மூழ்கி உயிரிழந்த கோவையைச் சோ்ந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகையை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப் படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவா் ஏ.சரவணன். இவா் உடுமலை அமராவதி அணைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்றிருந்தபோது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சரவணன் எஸ்பிஐ வங்கியில் ஊதியக் கணக்கு வைத்திருந்ததால், தமிழக அரசின் காப்பீட்டு ஒப்பந்தத்தின்கீழ் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ரூ.1 கோடிக்கான காசோலையை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் முன்னிலையில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினா். அப்போது, காவல் துணை ஆணையா் திவ்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அரசு ஊழியா்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைந்து தமிழக அரசு ஒரு சிறப்பு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
அதன்படி, அரசு ஊழியா்கள் தங்களின் ஊதியக் கணக்கை வைத்திருக்கும் வங்கிகளில் அவா்கள் பணியில் இருக்கும்போது விபத்து அல்லது எதிா்பாராத காரணங்களால் உயிரிழந்தால், எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியா்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தின்கீழ் தலைமைக் காவலா் சரவணனின் குடும்பத்துக்கு இந்த நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


