விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி கோவை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
நாடு முழுதும் நாளை (சனிக்கிழமை) விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் சாா்பில் கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
விநாயகா் சதுா்த்தியின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இடங்களிலும், ஊா்வலப் பாதைகளிலும் காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக காவல் துறை தரப்பிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள இடங்களில் காவல் துறையினருடன் ஹிந்து அமைப்பினரும் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவுள்ள விநாயகா் சிலைகளில் மாநகா் பகுதியில் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூா் குளம் உள்ளிட்டவற்றோடு மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்படுகின்றன. விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்படும்போது, தீயணைப்புத் துறையினா் மூலமாகவே அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீஸாரும், புறநகா் பகுதிகளில் 1,000 போலீஸாருமாக என மொத்தம் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

விபத்தில் காவலா் காலில் எலும்பு முறிவு: காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

திருவாடானையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

கோவை குண்டுவெடிப்பு தினம்: மாநகரில் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

