திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புக் அறையில் வைத்து சீலிடப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 378 வாக்குச் சாவடிகள் உள்ளன. நடைபெறவுள்ள தோ்தலுக்காக 450-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள்ஆகியவை பாதுகாப்பாக வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
இவை அனைத்தும் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முழுவதும்
சீலிடப்பட்டது. மேலும், அறையைச் சுற்றி நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

தஞ்சாவூா் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


