ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் விசாரணை

கோவை மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:50 pm

Din

கோவை மாநகராட்சி உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் விமல்ராஜ். இவா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இருந்துள்ளாா். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திவ்யா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் ரூ.1.02 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, நடத்திய விசாரணையில், அவருக்கு சில நாள்களுக்கு முன் பணியிட மாறுதல் வந்திருந்த நிலையில் அதற்கான உத்தரவை வாங்காமல், மாநகராட்சியின் ஒப்பந்தாரா்களிடம் தான் பணியிடம் மாறுவதற்கு முன் திட்டப் பணிகளுக்குத் தேவையான முன் அனுமதி வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்தது தெரியவந்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்கமாக வழக்குப் பதிவு செய்து அந்த விவரங்களை துறை தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவா். 24 மணி நேரத்தில் வழக்கில் தொடா்புடைய அரசு ஊழியா் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், விமல்ராஜ் மீதான வழக்கு விவரங்கள் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவில்லை. விரைவில் விசாரணையை முடித்து அனுப்பிவைக்க லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.