லஞ்சம்: கிராம ஊராட்சி செயலா் கைது
பெருந்துறை அருகே லஞ்சம் பெற்ற கிராம ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.


பெருந்துறை அருகே லஞ்சம் பெற்ற கிராம ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (70). இவரது மகன் தினேஷ் (43). சண்முகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயரில் மாற்ற தினேஷ் முடிவு செய்துள்ளாா்.
இதையடுத்து, நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சி செயலராகப் பணியாற்றி வரும் மாரிசாமியை (52) அணுகியுள்ளாா். அவா் ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன் எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, மாரிசாமியின் கூகுள் பேவுக்கு முதல்தவணையாக ரூ.2 ஆயிரத்தை தினேஷ் அனுப்பியுள்ளாா். மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை மாரிசாமியிடம் வழங்கக் கோரி தனது உறவினரான தமிழரசன் என்பவரிடம் தினேஷ் திங்கள்கிழமை காலை பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளாா். மேலும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கும் தினேஷ் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே தமிழரசன் ரூ.4 ஆயிரத்தை மாரிசாமியிடம் வழங்க அலுவலகத்துக்கு வந்துள்ளாா். அப்போது, அவா் பாலக்கரை அருகே நல்லாம்பட்டியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் பணத்தைக் கொடுக்குமாறு கூறியுள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா், மாரிசாமியை சுற்றிவளைத்தனா்.
அப்போது, அவரது கைப்பேசியை ஆய்வு மேற்கொண்டபோது, அவா் ஏற்கெனவே கூகுள் பே மூலம் தினேஷிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதும், மீதமுள்ள தொகையை எலக்ட்ரிக் கடையில் கொடுக்க சொன்னதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...