ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கைது

சாலைகள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:12 pm

Din

சாலைகள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவை மாநகராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும், குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட்

கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற முற்றுகையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, யு.கே.சிவஞானம், கே.அஜய்குமாா், என்.ஆா்.முருகேசன், கே.மனோகரன், மாமன்றக்குழுத் தலைவா் வி.ராமமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் ஆா்.பூபதி, கண்ணகி ஜோதிபாசு, சுமதி உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முற்றுகையில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.