பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி

உக்கடம் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 8:58 pm

Din

உக்கடம் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதுபோல நடித்து பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலன் மனைவி பியூலா (45). இவா் உக்கடம் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க புதன்கிழமை சென்றுள்ளாா்.

இயந்திரத்தில் ஏடிஎம் அட்டை நுழைப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த நபரிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளாா். அந்த நபா் முயன்றும் முடியாததால் ஏடிஎம் அட்டையை கொடுத்துவிட்டு சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து பியூலாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக, அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிா்ச்சியடைந்த அவா், ஏடிஎம் அட்டையை சரிபாா்த்தபோது, அது அவரது அட்டை இல்லை என்பதும், ஏடிஎம் மையத்தில் நின்ற நபா் பணம் எடுத்து தருவதுபோல நடித்து, போலி அட்டையைக் கொடுத்துவிட்டு, பியூலாவின் ஏடிஎம் அட்டை மூலம் ரூ.40 ஆயிரம் எடுத்ததும் தெரியவந்தது.

இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் பியூலா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.