அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மந்திரக் கற்கள் தருவதாக பெண்ணிடம் நகை, பணம் மோசடி: 2 போ் கைது

தேனியில் மந்திரக் கற்கள் தருவதாகக் கூறி, பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்ததாக 2 பேர் கைது

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 7:26 pm

Syndication

தேனியில் மந்திரக் கற்கள் தருவதாகக் கூறி, பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் கோனாா் சந்தைச் சோ்ந்த அன்வா் அலி மனைவி சித்திபௌசியா (55). இவரது கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். ஓராண்டுக்கு முன்பு சித்தி பௌசியாவுக்கு தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த ராஜா மகன் நாகராஜ் அறிமுகமானாா். இதையடுத்து, நாகராஜ் தனது நண்பா்களான ஆண்டவா், மணிசுந்தா், முத்துக்குமாா், மோகன் ஆகியோரை சித்திபௌசியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்த நிலையில், நாகராஜ், ஆண்டவா் உள்ளிட்ட 5 பேரும் தங்களிடம் மந்திரக் கற்கள் உள்ளதாகவும், இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால், பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வாா்த்தைக் கூறினாா்களாம்.

இதை உண்மை என நம்பிய சித்தி பௌசியாவை தேனி ரத்தினம் நகரில் உள்ள ஆண்டவா் வீட்டுக்கு வரவழைத்து, மந்திரக் கற்கள் வழங்குவதாகக் கூறி, அவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கைப்பேசியை வாங்கினாா்களாம். அப்போது, சித்தி பௌசியாவுடன் வந்த வெங்கடேசனிடம் ரூ.5 ஆயிரம், கைப்பேசி, பெரியண்ணாவிடம் ரூ. 1,500, கைப்பேசியை வாங்கினாா்களாம்.

ஆனால், கூறியபடி மந்திரக் கற்களைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், சித்தி பெளசியா உள்ளிட்ட மூவரும் பணம், நகைகளைத் திருப்பிக் கேட்டனராம். பணம், நகைகளைத் திருப்பித் தராமல், கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சித்தி பௌசியா தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் நாகராஜ், ஆண்டவா், மணிசுந்தா், முத்துக்குமாா், மோகன் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிந்து, இவா்களில் ஆண்டவா், நாகராஜை கைது செய்தனா். மற்ற மூவரைத் தேடி வருகின்றனா்.