தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பல்வேறு இடங்களில் நகை, பணம் திருடியவா் கைது

செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட சசிகுமாா்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:21 pm

செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(26). இவா், வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி உயா் ரக மோட்டாா் சைக்கிளில் விலை உயா்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதாக செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீஸாா் சில தினங்களாக சசிகுமாரை நோட்மிட்டு, பின்னா் அவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் பல்வேறு இடங்களிள் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, 40 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா்.

பின்னா், நகை பணத்தை பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவரது வீட்டில் இருத்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.