செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(26). இவா், வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி உயா் ரக மோட்டாா் சைக்கிளில் விலை உயா்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதாக செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் போலீஸாா் சில தினங்களாக சசிகுமாரை நோட்மிட்டு, பின்னா் அவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா் பல்வேறு இடங்களிள் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, 40 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா்.
பின்னா், நகை பணத்தை பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவரது வீட்டில் இருத்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


