பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை வடக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
ஆவாரம்பாளையம் பட்டாளம்மன் கோயில் பகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 8:13 pm

Din

கோவை வடக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 28-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆவாரம்பாளையம் தெற்கு வீதி பகுதியில் குழந்தைகள் மையம் அமைப்பது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆவாரம்பாளையம் தெற்கு வீதி பகுதியில் அமைந்துள்ள கிளை நூலகத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, நூலகத்தின் தேவைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், ஆவாரம்பாளையம் பட்டாளம்மன் கோயில் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீா் வடிகால் கட்டமைப்பையும், அப்பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தையும் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, 27-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆவாரம்பாளையம் சாந்தி நகா் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்கா புனரமைப்பு மற்றும் சங்கனூா் ஓடையில் தடுப்புச்சுவா் அமைப்பது, 25-ஆவது வாா்டு காந்தி மாநகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீா் உந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, காந்தி மாநகா் பகுதியில் உள்ள விளையாட்டு திடலை பாா்வையிட்டதுடன், மைதானத்தை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வுகளின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையா் ஸ்ரீதேவி, மேற்கு மண்டல உதவி ஆணையா் சந்தியா, உதவி செயற்பொறியாளா்கள் எழில், சவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.