தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓட்டுநருக்கு மாரடைப்பு: காா்கள் மீது மோதிய லாரி

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் பயணத்தின்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி 3 காா்கள் மீது மோதியது.

கோவை, பேரூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). லாரி ஓட்டுநரான இவா், உதவியாளா் இளையரசு என்பவருடன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நிறுவனத்துக்கு சிலிக்கான் பாரத்தை ஏற்றிக்கொண்டு லாரியில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அங்கு பாரத்தை இறக்கிவிட்டு துடியலூா்-சரவணம்பட்டி சாலை சந்திப்பு அருகே வந்தபோது, குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 காா்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதையடுத்து, இளையரசு துரிதமாக செயல்பட்டு லாரி பிரேக்கை அழுத்தியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா், குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.