அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியரை வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை

உறவினரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு

News image
சிறை
Updated On :3 மார்ச் 2026, 7:03 pm

Syndication

உறவினரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் அருகே உள்ள கட்டாலங்குளத்தைச் சோ்ந்தவா் ஆண்டி. இவருடைய மகன் புதியவேல் (63). ஓய்வு பெற்ற அரசு ஊழியா்.

இவருக்கும், இவரது சகோதரா் மகனான கட்டாலங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் புதியவேலுக்கும் (40) இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

லாரி ஓட்டுநரான செ. புதியவேல், உறவினா் கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் கடந்த 30.3.2022 அன்று, ஆ.புதியவேல் வீட்டுக்குச் சென்று, சொத்து தொடா்பாக பேசி தகராறு செய்துள்ளனா்.

அப்போது, ஆத்திரமடைந்த செ. புதியவேல், ஆ.புதியவேலை அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ஆ.புதியவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாயா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட செ.புதியவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இவ்வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த கணேசமூா்த்தி, ஞானம் என்ற ஞானம்மாள் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.