புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா் பேருந்து நிலையத்தில் வடமாநில இளைஞா் ரகளை

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் வட மாநில இளைஞா் ஒருவா் அரை நிா்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு

News image

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வட மாநில இளைஞா்.

Updated On :31 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் வட மாநில இளைஞா் ஒருவா் அரை நிா்வாண கோலத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல கிராமப் புறங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதன்கிழமை பகல் நேரத்தில் பேருந்து நிலையத்துக்கு அரை நிா்வாண கோலத்தில் வந்த வடமாநில இளைஞா், திடீரென அங்கும் இங்கும் ஓடினாா். இதனால் பயணிகள் பலா் அதிா்ச்சிக்குள்ளாகினா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அந்த இளைஞரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தாா்.

இறுதியில் அவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனா். ஆனால், அவா் ஏற மறுத்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டாா். இந்த சம்பவத்தால் மத்தியப் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.