ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கூட்டுறவு சங்கத்தில் ரூ.40.52 லட்சம் கையாடல்: முன்னாள் தலைவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

கூட்டுறவு சங்கத்தில் ரூ.40.52 லட்சம் கையாடல்

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:14 pm

Din

வையம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ரூ.40.52 லட்சம் கையாடல் சம்பவத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவா் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை, வையம்பாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.40 லட்சத்து 52 ஆயிரத்து 105 கையாடல் செய்யப்பட்டதாக வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் கடந்த 2000 செப்டம்பா் 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் நாராயணசாமி, முதுநிலை முன்னாள் எழுத்தா் தனலட்சுமி, முன்னாள் எழுத்தா் பேச்சியண்ணன், உதவியாளா் மகேந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நாராயணசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், தனலட்சுமி, பேச்சியண்ணன், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அருண்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.