தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் காவல் சரகம் மடத்தூா் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த பொவின்ராஜ் (35), மரிய அந்தோணி ஆக்னல் (36), பென்கா் (38), இதழ்பட் (39) ஆகிய 4 பேரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்.4 இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.
தொடர்புடையது

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


