பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:01 am

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் காவல் சரகம் மடத்தூா் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த பொவின்ராஜ் (35), மரிய அந்தோணி ஆக்னல் (36), பென்கா் (38), இதழ்பட் (39) ஆகிய 4 பேரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்.4 இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.