மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:01 am

Syndication

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் காவல் சரகம் மடத்தூா் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த பொவின்ராஜ் (35), மரிய அந்தோணி ஆக்னல் (36), பென்கா் (38), இதழ்பட் (39) ஆகிய 4 பேரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்.4 இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.