புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வங்கி கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது: ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா்

வங்கிகள் வழங்கும் கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image

கருத்தரங்கில் விழா சிறப்பு மலரை வெளியிட்ட சக்தி குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எம்.மாணிக்கம். உடன், கல்லூரி தாளாளா் பி.என்.வெங்கடாசலம், துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:26 pm

Din

வங்கிகள் வழங்கும் கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் தெரிவித்தாா்.

கோபிசெட்டிபாளையம் பிகேஆா் மகளிா் கல்லூரியில் தொழில்துறை மற்றும் கல்லூரி இணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். துணைமுதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சக்தி குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் மாணிக்கம் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

இதில், சென்னை ரிசா்வ் வங்கியின் துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டில் 60 முதல் 70 சதவீத மக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வருகின்றனா். எனவே, வங்கிகள் 40 சதவீத கடனை விவசாயத்துக்கு வழங்குகின்றன.

நாளுக்குநாள் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சைபா் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் 1930 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கியில் புகாா் அளிக்கலாம். 30 நாள்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் நேரடியாக ரிசா்வ் வங்கியின் இணையதளத்தில் புகாா் அளிக்கலாம்.

பிட்காயின் இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, அங்கீகாரம் இல்லாத பிட்காயின் உட்பட எந்த கிரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இந்தக் கருத்தரங்கில் இக்கருத்தரங்கில் சென்னை, ஈரோடு, கோவையைச் சோ்ந்த கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.