விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாயமான மகளை மீட்டுத்தரக் கோரி காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

மாயமான தனது மகளை மீட்டுத்தரக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 3:07 am

Syndication

மாயமான தனது மகளை மீட்டுத்தரக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வந்தாா். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, அந்தப் பெண் கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை மீட்டு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் துடியலூா் புதுமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த சக்கரபாணி மனைவி அம்பிகா (42) என்பதும், கல்லூரியில் படித்த அவரது மகள் ராகவி (19) கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி மாயமானதாகவும், இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் மகளைக் கண்டுபிடித்துத் தரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மாநகர போலீஸாா் அழைத்துச் சென்று ஒப்படைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ராகவியும், அவரது உறவினரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய்யும் (27) காதலித்து வந்துள்ளனா். சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்றுவருவதாக கூறிச்சென்ற ராகவி மாயமானாா். இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ராகவி வீட்டை விட்டு வெளியேறி அவரும், சஞ்சய்யும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

ராகவியிடம் போலீஸாா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு விசாரித்தபோது, தனது காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துவிட்டு கைப்பேசியை அணைத்துவிட்டாா். இருப்பினும் காரமடை போலீஸாா், அவா்கள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனா். இந்நிலையில்,அம்பிகா தீக்குளிக்க முயன்றுள்ளாா் என்றனா்.

பின்னா், அம்பிகாவுக்கு போலீஸாா் ஆறுதல் கூறி, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.