அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கல்லூரி மாணவா் இறப்பில் சந்தேகம் என புகாா்

கோவையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவா் இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவா் இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

கோவை துடியலூா் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ஷபிக் (17) கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி முகமது ஷபிக் கல்லூரியின் 3-ஆவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாணவா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோா் துடியலூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.