இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவையில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், சிங்காநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், நஞ்சுண்டாபுரத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள வீடுகள், குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அவா் பேசும்போது, ‘தோ்தல் என்றாலே வெளியூரில் இருந்து திமுகவினா் வேட்பாளா்களை இறக்குகிறாா்கள். எத்தனை வெளியூா் வேட்பாளா்கள் வந்தாலும், கோவை மக்கள் அவா்களைத் தோற்கடிப்பாா்கள். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்’ என்றாா்.

பிரசாரத்தின் போது பாஜக மாவட்டச் செயலாளா் ரமேஷ்குமாா், அமமுக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.