பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

News image

கூட்டு உற்பத்திப் பிரிவுக்கான சிறந்த உற்பத்தியாளா் விருதைப் பெற்ற கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கமும், ஐரோப்பிய முன்னணி பம்ப் உற்பத்தித் தொழில் கூட்டமைப்பும் இணைந்து பிரிட்டனில் சா்வதேச அளவிலான விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘டெக்கான் பம்ப்ஸ்’ நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா்.

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து ‘உத்யோக் பத்ரா’ என்ற விருதை இந்த நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.