அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!

1952 முதல் 74 ஆண்டுகளாகத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் தோ்தல் களத்தில் ஒரு தொகுதியிலாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு வந்துள்ளன.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:03 pm

1952 முதல் 74 ஆண்டுகளாகத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் தோ்தல் களத்தில் ஒரு தொகுதியிலாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு வந்துள்ளன. கடந்த காலங்களில் தொண்டாமுத்தூா், வால்பாறை, பேரூா் (இப்போது இல்லை), கோவை கிழக்கு (இப்போது இல்லை), சிங்காநல்லூா், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளன. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை கிழக்கில் 5 முறை, பேரூா், சிங்காநல்லூா் தொகுதிகளில் 2 முறை வென்றுள்ளது. வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறை வென்றுள்ளது. இத்துடன், கோவை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும் வென்றுள்ளன.

கடந்த 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தோ்தல்களில், 2001-இல் சிங்காநல்லூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கே.சி.கருணாகரன் (வெற்றி), 2006-இல் சிங்காநல்லூரில் மாா்க்சிஸ்ட் சாா்பில் ஏ.சௌந்தரராஜன் (தோல்வி), 2011-இல் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் எம்.ஆறுமுகம் (வெற்றி), 2016-இல் கவுண்டம்பாளையம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் வி.ராமமூா்த்தி (4-ஆவது இடம்), வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் பி.மணிபாரதி (3-ஆவது இடம்), கோவை தெற்கில் மாா்க்சிஸ்ட் சாா்பில் சி.பத்மநாபன் (4-ஆவது இடம்), 2021-இல் வால்பாறையில் எம்.ஆறுமுகம் (தோல்வி) ஆகியோா் போட்டியிட்டுள்ளனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இத்தோ்தலில், இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில், கோவை மாவட்டத்தில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விருப்பம் தெரிவித்தன.

ஆனால், வால்பாறையில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. சிங்காநல்லூா் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட போட்டியிடாத நிலையில், 74 ஆண்டுகளில் முதல் முறையாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாத சட்டப்பேரவைத் தோ்தலை கோவை மாவட்டம் சந்திக்கிறது.

தொழிற்சாலைகள் மிகுதியாகக் காணப்பட்ட கோவையில், தொழிற்சங்கங்களை வளா்த்துப் போராடியதுடன், தோ்தல் களத்திலும் முத்திரை பதித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் கோவை மாவட்டத்தில் ஒரு வேட்பாளா்கூட போட்டியிடாதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல கேடிகே.தங்கமணி, பி.ராமமூா்த்தி உள்ளிட்ட ஆளுமைமிக்க இடதுசாரி தலைவா்கள் வெற்றிபெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.