கோவையில் வீட்டின் 4-ஆவது மாடியில் குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, தெலுங்குபாளையம் உடையாா் வீதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (42). இவா் குளிா்சாதனப் பெட்டி மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வித்யா. இந்நிலையில், ராஜா தெரு அன்னை இல்லம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் குளிா்சாதனப் பெட்டி பழுதாகியுள்ளது.
இதையடுத்து குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் சனிக்கிழமை மாலை அசோக்குமாா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

சடலத்தை எரியூட்டச் சென்றவா் சிதையில் விழுந்து உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


