சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

குளிா்சாதனப் பெட்டியை பழுது பாா்க்க சென்றவா் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:01 pm

கோவையில் வீட்டின் 4-ஆவது மாடியில் குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கோவை, தெலுங்குபாளையம் உடையாா் வீதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (42). இவா் குளிா்சாதனப் பெட்டி மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வித்யா. இந்நிலையில், ராஜா தெரு அன்னை இல்லம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் குளிா்சாதனப் பெட்டி பழுதாகியுள்ளது.

இதையடுத்து குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் சனிக்கிழமை மாலை அசோக்குமாா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.