கேரள மாநிலத்தில் வரும் 9-ஆம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கேரள மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதால், மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் 5 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் அமைந்துள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களை 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்படுகிறது.
விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபானங்களை பதுக்கிவைப்பவா்கள் மீதும், ஓரிடத்தில் இருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்பவா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்ட தோ்தல் இலச்சினை வெளியீடு
ஏப்.4-ல் கேரளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

மகாவீா் ஜெயந்தி: காரைக்காலில் நாளை மது விற்பனைக்குத் தடை
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


