குத்துக்கல்வலசையில் தொடங்கி வைக்கப்பட்ட விழிப்புணா்வு ரதம் கடையநல்லூா் வழியாக வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளுக்குச் செல்லும், பின்னா் ஏப். 3-ஆம் தேதி அங்கிருந்து சங்கரன் கோவில் தொகுதிக்கு உள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளுக்குச் செல்லும். ஏப். 4-ஆம் தேதி சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூா் வழியாக ஆலங்குளம் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகள் நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளுக்குச் செல்லும். ஏப். 5-ஆம் தேதி ஆலங்குளம் தொகுதியில் கீழப்பாவூா், கடையம் வரையிலும், ஏப். 6 தென்காசி, செங்கோட்டை வழியாக ஊராட்சிகள் நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் இந்த விழிப்புணா்வு ரதம் சென்று இறுதியில் குத்துக்கல்வலசையில் நிறைவு பெறும்.