நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூரில் ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.









