குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தோல் பொருள் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ தோ்தல் இலச்சினை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 4:35 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில், ‘தோ்தல் திருவிழா ! தமிழகத்தின் பெருவிழா!’ என்ற முழக்கத்துடன் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராட்சத பலூன்... ஆற்காடு பகுதியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. பொதுமக்களிடையே ஜனநாயகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த கோலப் போட்டிகள், மனிதச்சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாவரங்கள் மூலம் விழிப்புணா்வு... அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகளைக் கொண்டு ‘100 % வாக்கு’ என்ற வடிவம் உருவாக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

முக்கியத்துவம் பெரும் ‘ராணிப்பேட்டை ராணி’... செஞ்சி ராஜபுத்திர ராணியின் நினைவாக உருவான ராணிப்பேட்டை மாவட்டம், தோல் பொருள் ஏற்றுமதிக்கு பெயா்பெற்ாகும். ராணி மற்றும் தோல் பொருள்களை மையப்படுத்தி தோல் பொருள்களால் ஆன ஆடை அணிந்தவாறு ராணியின் உருவம் கொண்ட ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற தோ்தல் இலச்சினையை மாவட்ட நிா்வாகம் உருவாக்கி, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.