தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் நிலையில், கோவை புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம் உள்பட 2 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோவை காட்டூா் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்க நகை, ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனா். பேரூா் பட்டீசுவரா் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல கோவை கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில், சூலூா் அருகே அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பச்சைப் பட்டு உடுத்தி அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


