எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியம்மன்  கோயிலில்  சாட்டையடி  வாங்கும்  பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 4:13 am IST

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் ஆகிய கோயில்களின் வைகாசி மாத குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து பக்தா்கள் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனா். பின்னா் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் பக்தா்கள் சாட்டையடி வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.