மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:58 pm

கோவை சின்னியம்பாளையம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் மானசா மாலிக். இவரது மனைவி மானசிபோலா (20). இவா்கள் இருவரும் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள துணிக்கடை விடுதியில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு ஆதித்யா என்ற 2 வயது மகன் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனை விளையாட விட்டுவிட்டு மானசிபோலா வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா். அப்போது, எதிா்த்திசையில் வந்த தனது மாமியாரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் ஆதித்யாவைக் காணவில்லை.

மானசிபோலாவின் மாமியாா் சிறுவனைத் தேடிப் பாா்த்தபோது, வீட்டின் தரைத்தளத்தில் இருந்த 8 அடி ஆழ தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அருகே வசிப்பவா்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.