ஊஞ்சலில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
விழுப்புரம் அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், வளவனூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி சரண்யா. தம்பதியரின் மகன் வைஷாந்த் (11). இவா் மடுகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த வைஷாந்த், வீட்டின் ஒரு பகுதியில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடினாா்.
அப்போது புடவை கழுத்தில் சுற்றியதில் வைஷாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் தம்பதியினா் சிறுவனை மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வைஷாந்த் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...