ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஊஞ்சலில் கழுத்து இறுகி சிறுவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அருகே வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், வளவனூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி சரண்யா. தம்பதியரின் மகன் வைஷாந்த் (11). இவா் மடுகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த வைஷாந்த், வீட்டின் ஒரு பகுதியில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடினாா்.

அப்போது புடவை கழுத்தில் சுற்றியதில் வைஷாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் தம்பதியினா் சிறுவனை மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வைஷாந்த் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.