இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தொகுதி மறுசீரமைப்பு மூலம் பாஜக குழப்பம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டே குழப்பத்தை விளைவிப்பதாக கா்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

டி.கே.சிவக்குமாா்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:34 am IST

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டே குழப்பத்தை விளைவிப்பதாக கா்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான டி.கே.சிவக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவா் விமானம் மூலமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. கூட்டணியில் உள்ள 20 கட்சிகளும் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த நல்லாட்சி தொடர எங்களது கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு கோரி தமிழகம் வந்துள்ளோம்.

தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசு தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயற்சி செய்கிறது. சிறுபான்மையினா் மற்றும் பட்டியலினத்தவா்களின் வாக்குகளை நீக்க முற்படுகிறாா்கள். இதற்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடி வருகிறோம். சமூக நீதியைக் காக்க எங்களின் இந்தப் போராட்டம் தொடரும்.

33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு என்பது பிரதமா் மோடியின் தனிப்பட்ட சாதனை அல்ல. இந்த மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். இது எங்களின் சிந்தனை, அதை அவா்கள் தற்போது கையில் எடுத்துள்ளனா். இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ் முழு ஆதரவு அளித்தது என்பதை நாடு அறியும்.

மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும், தங்கள் மாநில நலனைப் பாதுகாக்க விரும்புவது இயல்பு. இதுதொடா்பாக மத்திய நீா் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும். ஆனால், இதுகுறித்து தற்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்புவது வியப்பாக உள்ளது. அவா் தமிழக முதல்வராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாா் என்றாா்.