வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் தோட்டத் தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் டி.லட்சுமண சிங் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது, தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது உள்ளிட்டோா் தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தனா்.
அப்போது, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கேரள மாநில தோட்டத் தொழிலாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அதிமுக தோ்தல் அறிக்கையை விளக்கினா்.
தோ்தல் பொறுப்பாளா் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் மணிகண்டன், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தெலுங்கு தேசம் கட்சியினா்

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


