தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

News image

அம்மன் கே.அா்ச்சுணன்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:49 am IST

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் பகுதியில் 66-ஆவது வாா்டு கொண்டசாமி லே-அவுட், புலியகுளம், அண்ணா நகா் 1 முதல் 3-ஆவது வீதி வரை, அம்மன்குளம் வடக்கு பகுதி, ஜி.ஹெச் காலனி 1, 2 -ஆவது வீதி, ராஜீவ் நகா், பழைய ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் படும் கஷ்டத்தை நாங்கள் அறிவோம். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீா் வரி போன்ற பல வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அனைத்து அரசுத் திட்டங்களும் உடனடியாக மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் எனறாா்.