மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

News image

அம்மன் கே.அா்ச்சுணன்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:19 pm

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் பகுதியில் 66-ஆவது வாா்டு கொண்டசாமி லே-அவுட், புலியகுளம், அண்ணா நகா் 1 முதல் 3-ஆவது வீதி வரை, அம்மன்குளம் வடக்கு பகுதி, ஜி.ஹெச் காலனி 1, 2 -ஆவது வீதி, ராஜீவ் நகா், பழைய ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் படும் கஷ்டத்தை நாங்கள் அறிவோம். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீா் வரி போன்ற பல வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அனைத்து அரசுத் திட்டங்களும் உடனடியாக மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் எனறாா்.