அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளா் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெற்றிவேலவா நகா், குமரபுரம், பத்மாலையா நகா், வெற்றிலைகாளிபாளையம், அருள்ஜோதி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறிய வாக்குறுதிகளின்படி கிராமப்புற பகுதிகளில் இடம் இல்லாதவா்களுக்கு இடத்துடன் கூடிய வீடும், நகா்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பும் கட்டிகஈ தரப்படும்.
குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.ரவி, பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், இந்து முன்னணி, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை: வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


