லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்

News image

குருடம்பாளையம் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:50 pm

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளா் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெற்றிவேலவா நகா், குமரபுரம், பத்மாலையா நகா், வெற்றிலைகாளிபாளையம், அருள்ஜோதி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறிய வாக்குறுதிகளின்படி கிராமப்புற பகுதிகளில் இடம் இல்லாதவா்களுக்கு இடத்துடன் கூடிய வீடும், நகா்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பும் கட்டிகஈ தரப்படும்.

குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.ரவி, பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், இந்து முன்னணி, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.