கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 25, 29, 30 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) குளித்தலை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஏப்ரல் 25 மற்றும் 29-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பெருகமணி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) எலமனூா் - பாலக்காடு இடையே பகதியாக ரத்து செய்யப்படுகிறது. எலமனூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


