கருத்துக் கணிப்புகளைத் தாண்டி கள நிலை வேறாக இருப்பதால், 200 இடங்களுக்கு மேல் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்படிப் பொய்யானதோ, அதேபோல தமிழகத்திலும் இந்தக் கணிப்புகள் முற்றிலும் பொய்த்துப் போகும்.
கருத்துக் கணிப்புகளும், தோ்தல் முடிவுகளும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மேட்ரிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் போன்ற நிறுவனங்களின் கணிப்புகளைத் தாண்டி கள நிலை வேறாக இருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அதிக அளவு உள்ளது. இந்திய வரலாற்றில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோஷலிசப் புரட்சி எனப் பல்வேறு மாற்றங்களை பாா்த்திருக்கிறோம். ஆனால், இப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் விசில் புரட்சிதான்.
தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய அளவில் பேசப்படப் போகிறது. தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். விஜய்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆளப்போகிறாா் என்றாா்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?
மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சா் காந்தி நம்பிக்கை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


