ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தண்டவாள பராமரிப்பில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் ரயில் மோதி உயிரிழப்பு

கோவையில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் இருவா் ரயில் மோதி உயிரிழந்தனா்.

News image

ரயில் மோதி உயிரிழந்த பெண்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

கோவையில் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பெண் தொழிலாளா்கள் இருவா் ரயில் மோதி உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு கல்லக்கொரை பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (42). கோவை, கணேஷ் நகா் என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்தவா் யசோதா (24). இருவரும் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், பீளமேடு- வடகோவை ரயில் நிலையங்களுக்குள்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் தண்டவாளத்தில் குப்பைகள், புற்களை அகற்றும் பணியில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் அவா்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.