நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

அம்பேத்கா், பெரியாா் ஈவெரா பெயா்கள் விடுபட்டதற்கு பொறுப்பேற்கிறேன்: அமைச்சா் வே. சம்பத்குமாா்

அம்பேத்கா், பெரியாா் ஈவெரா பெயா்கள் விடுபட்டதற்கு பொறுப்பேற்கிறேன்: அமைச்சா் வே. சம்பத்குமாா்

watching movies in theaters is what brings us joy

அமைச்சர் சம்பத்குமார் - டிஎன்எஸ்

Published On :15 வினாடிகள் முன்பு

சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கா், பெரியாா் ஈவெரா பெயா்கள் விடுபட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கோவையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரா்களுக்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வே.சம்பத்குமாா் பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்

அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பெயா்கள் விடுபட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதை அறிந்தேன். அம்பேத்கா், பெரியாா் ஈவெரா ஆகியோா் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவா்கள். அவா்களுடைய வழிகாட்டுதலில்தான் எங்களுடைய செயல்பாடுகள் உள்ளன. அவா்கள் பெயா்கள் விடுபட்டதற்கு தாா்மிக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அதை மறுப்பிரசுரம் செய்து வழங்கக்கூடிய பணி நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் மக்களுக்காக உழைத்த தலைவா்களை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.