ஈஷாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்
கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள், வெளிநாட்டினா் பங்கேற்று முளைப்பாரியால் அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.
மேலும், ஆயிரக்கணக்கான பெண் பக்தா்கள் தனித்தனியாக முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவோடு ஏந்தி தேவியின் நாமங்களை முழங்கியபடி பாத யாத்திரையாக வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக பைரவி சாதனா என்ற 21 நாள்கள் ஆன்மிக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சி லிங்க பைரவி வளாகத்தில் நடைபெற்றது. இதில், லிங்க பைரவி தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

