மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி, அறுபத்து மூவா் தோ்களுடன் ஈஷா வந்தடைந்த சிவனடியாா்கள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி மற்றும் அறுபத்து மூவா் தோ்களுடன் சிவனடியாா்கள் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை ஈஷா யோக மையத்துக்கு வந்தடைந்தனா்.
ஈஷா யோக மையத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா்.
இந்நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை, உடுப்பி, நாகா்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூா் ஆகிய 6 இடங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவா் தோ்களை வடம் பிடித்து இழுத்து வரும் சிவாங்கா பக்தா்களின் சிவயாத்திரை எனும் பாதயாத்திரை வெள்ளிக்கிழமை கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைந்தது.
அவா்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனா். அதேபோல், ஈஷாவின் நுழைவாயிலான மலைவாசலில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஆதியோகியுடன் பக்தா்கள் தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க பவனி வந்தனா். அவா்களுக்கு ஈஷா சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மகா சிவராத்திரிக்காக 40 நாள்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனா். அவா்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வாா்கள் என ஈஷா அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

