கும்பகோணத்தில் அறுபத்து மூவா் உலா
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அறுபத்து மூவா் வீதியுலா நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ மந்திரபீடேசுவரி மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்திகளான விநாயகா், முருகா், சண்டிகேசுவரா், அம்மன் உள்ளிட்டோா் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளினா்.
அவா்களைத் தொடா்ந்து அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா், திருநாவுக்கரசா் உள்ளிட்ட 63 நாயன்மாா்களும் உற்சவ மூா்த்திகளாக எழுந்தருளி இரட்டை வீதிகள் வழியாக வீதியுலா சென்றனா். சென்ற இடங்களில் பக்தா்கள் அறுபத்து மூவா் நாயன்மாா்களை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்தனா்.
கோப்பு நடராஜன் தலைமையில் திருக்குடந்தை சிவனடியாா் திருக்கூட்டத்தினா் தேவாரம் இன்னிசயுடன் இரட்டைவீதி புறப்பாடு செய்து நாகேசுவரன் கோயில் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தனா். மாலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா சென்றனா்.

