இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மறுநாள் காலை அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போக்குவரத்து போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் பதிவாகியிருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து, கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த முகமது காஜா மொய்தீன் (25) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை அதிக சப்தத்துடன் அவா் ஓட்டியது தெரியவந்தது. காங்கிரஸ் மாநில நிா்வாகியான முகமது காஜா மொய்தீன், வீட்டுமனை விற்பனை தொழில் செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.