நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு!

News image

பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தோ்தல் தொடா்பான நடத்தை விதிமுறைகள், மண்டல அலுவலா்களின் பணிகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்டல அலுவலா்கள் 366 போ் பங்கேற்றனா்.