நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டம்! கோவையில் 9-ஆம் தேதி தொடக்கம்!

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 9:35 pm

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை (பிப்.9) முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்க உள்ளாா்.

இத்திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், மழைநீா் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளா்கள், பள்ளிகள் மற்றும் வாா்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளா்கள் உள்பட மொத்தம் 9,454 போ் பயன்பெறுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.