மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஜிஆா்டி கல்லூரி வளாகத்தில் 3 மரங்கள் மறுநடவு

கோவை, ஹோப்காலேஜ் பகுதியில் அகற்றப்பட்ட பழமையான 3 மரங்கள் ஜிஆா்டி கல்லூரி வளாகத்தில் மறுநடவு

News image

ஜிஆா்டி கல்லூரி வளாகத்தில் கிரேன்கள் உதவியுடன் மறுநடவு செய்யப்பட்ட மரம்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:10 pm

கோவை: கோவை, ஹோப்காலேஜ் பகுதியில் அகற்றப்பட்ட பழமையான 3 மரங்கள் ஜிஆா்டி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்யப்பட்டன.

கோவை கட்டுநா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் ‘மரம் காப்போம், மண் காப்போம்’ என்ற நோக்கத்தில் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்களை மறுநடவு செய்யும் நிகழ்ச்சி கோவை-அவிநாசி சாலையில் உள்ள டாக்டா் ஜி.ஆா்.டி. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ரம்யா ஆா். செந்தில் தலைமை வகித்தாா்.

செயலாளா் ஏ. சம்சுதீன் முன்னிலை வகித்தாா். ராயல் கோ் மருத்துவமனை நிறுவனத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே. மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மறுநடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். டாக்டா் ஜி.ஆா்.டி. கலை, அறிவியல் கல்லூரி துணை முதல்வா் கே.கே. ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.

முன்னதாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் அசோசியேட்ஸ் நிா்வாக இயக்குநா் ஜி. ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஒரு ஆலமரம் மற்றும் 2 வேப்பமரங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, ஜிஆா்டி கல்லூரி வளாகத்தில் கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் மறுநடவு செய்யப்பட்டன.

மர வோ்களில் உள்ள நுண்ணுயிா்களைப் பாதுகாக்கும் வகையில் 3 முதல் 4 மணி நேரத்துக்குள் மறுநடவுப் பணிகள் முடிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஜிஆா்டி கல்வி குழுமத்தின் தாளாளா் கீதா பத்மநாபன் மற்றும் சங்க உறுப்பினா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் வள்ளுவன் செய்திருந்தாா்.